கவிதை
ஒரு கவிதை ஒரு வாய் சோற்றுக்கு உறவழைத்து காத்திருக்கும் காகம்! ஒரு துணை பிரிந்தாலும் மறுதுனை தேடாது மணிப்புறா! ஒரு முடி உதிர்ந்தாலும் வாழாமல் உயிர் நீக்கும் கவரிமான்! ஒரு எழுத்தை மொழியாக்கி ஒருகோடி கவிபாடும் குயில்! உண்மையில் அவைதானே உயர்திணை ஆசிரியர் சொல்கிறார் அஃறிணை என்று..?