பெருந்தலைவர்
உத்தமர் காந்தி வழியினிலே, சத்தியம் காத்த ஒரு மனிதர்; நித்தம் நித்தம் நாட்டுநலன், நினைத்தே வாழ்ந்த பெருந்தலைவர். பள்ளிக் குழந்தைகள் பசிபோக்க, பாரினில் உதித்த பண்பாளர்; சொல்லில் அடிக்கும் வல்லமையை, சுயமாய் பெற்ற எம் தலைவர். பாமரன் போன்ற தோற்றமுடன், பாரே புகழும் ஏற்றமுடன்; ஆலைகள், அணைகள் நிறுவியவர், அதிசயம் நிறைந்த பிறவியவர். மனிதனை மதித்த பண்பாளர், மக்கள் சேவையின் மாண்பாளர்; கனிகளை நமக்குத் தந்திடவே, கல்லடி பட்ட மரமானார். இனியொரு தலைவர் இதுபோலே, இப்புவி தோன்றி வருவாரோ? பாரே போற்றும் பெருந்தலைவர், பணியினை மீண்டும் தருவாரா? இள.புகழேந்தி.D.T.Ed.,M.A.,B.Ed., ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி, ரெட்டிபட்டி காட்டுவளவு, ஓமலூர் ஒன்றியம்.