இடுகைகள்

ஜனவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உழவுக்கு வந்தனம்

உழவுக்கு வந்தனம் உலகைக் காத்திடும் முதல் ஆலை உழைப்பது ஒன்றே அவன் வேலை உழவன் எனுமோர் இனம்படும் பாடு –அந்த ஓரினம் இல்லையேல் இப்பார் சுடுகாடு அங்கம் முழுவதும் தீயாக வேக அவனியில் அவனினம் வறுமையில் சாக பேருக்கு சாப்பிட்டு வாழ்வானவன்- இப் பாருக்கு சோறூட்டும் தாயானவன் பாலொடு பச்சரிசி செங்கரும்பையும் மாவொடு பலாவும் செவ்வாழையும் ஆவொடு கன்றையும் அழகாக்குவான் –அவன் அரைகுறை ஆடையும் அழுக்காக்குவான் தேசிய மேடையில் பேசியோர் வார்த்தைகள் எங்கோ காற்றினில் பறந்ததப்பா ஒட்டிய இடையினில் கட்டிய கோவணம்- ஒரு தேசியக் கொடியினும் சிறந்ததப்பா.                                   இள.புகழேந்தி