இடுகைகள்

டிசம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மரமும் மனிதனும்

ஒருமுறை ஒரு அரசன் தனது பரிவாரங்களுடன் காட்டுவழியே பயணித்துக் கொண்டிருந்தான். அப்போது எங்கிருந்தோ ஒரு கல் வந்து அரசனின் மகுடத்தில்பட்டு மகுடம் கீழே விழுந்துவிட்டது. அதோடு கூட அரசனின் தலையில் லேசான காயமும் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. அரசன் கடும் கோபம் கொண்டான்.                          உடனே காவலர்களை ஏவி நாற்புறமும் தேடச்செய்தான். சிறிது நேரத்தில் வீரர்கள் ஒரு மூதாட்டியை பிடித்து வந்தனர். அரசன் அவளை விசாரித்தான். அவளோ தான் மிக்க பசியுடன் இருந்ததாகவும், பழங்கள் நிறைந்த மாமரத்தின் மீதே தான் கல்லை எறிந்ததாகவும், தவறுதலாக அரசன் தலையில் விழுந்துவிட்டதென்றும் அதற்காக தன்னை மன்னிக்கும்படியும் வேண்டினாள்.                          இதைக்கேட்ட அரசன் தனது அமைச்சர்களிடம் “இக்கிழவிக்கு தகுந்த தண்டனை வழங்குவோருக்கு சிறந்த பரிசு வழங்கப்படும்” என்று கூறினான்.                     அமைச்சர்கள் பலரும்   கிழவியை கொன்றுவிட வேண்டும், கையை வெட்டிவிட வேண்டும் என பல கோரமான தண்டனைகளை கூறினர்.                     ஆனால் முதன்மை அமைச்சர் மட்டும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். இதைக்கண்ட மன்னன் அவர