இடுகைகள்

ஜூலை, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கர்மவீரர் காமராசர்

படம்
கள்ளம் இல்லா வெள்ளை மனம்   கதரை அணிந்த கருந்தேகம் சொல்லில் அடங்கா அவர்புகழை   சொல்லவும் கேட்கவும் சுகம்தானே ! கல்வி என்ற சொல்லுக்கே   கண்ணியம் செய்த பெருந்தலைவர் பள்ளி செல்லும் குழந்தைகளின்   பசியைப் போக்கிய மாமனிதர் . நாட்டில் தொழில்கள் பெருகிடவே   நல்ல திட்டம் தீட்டியவர் , ஆற்றின் குறுக்கே அணைகட்டி   ஏற்றம் பெற வழி காட்டியவர் . விருது நகரின் விருதாக   விளங்கிய காம ராசரையே தொழுது நாமும் நாள்தோறும்   தூய வழியில் நடப்போமே !                                    இள.புகழேந்தி