கர்மவீரர் காமராசர்
கள்ளம்
இல்லா வெள்ளை மனம்
கதரை அணிந்த கருந்தேகம்
சொல்லில்
அடங்கா அவர்புகழை
சொல்லவும் கேட்கவும் சுகம்தானே!
கல்வி என்ற சொல்லுக்கே
கண்ணியம் செய்த பெருந்தலைவர்
பள்ளி செல்லும் குழந்தைகளின்
பசியைப் போக்கிய மாமனிதர்.
நாட்டில்
தொழில்கள் பெருகிடவே
நல்ல திட்டம் தீட்டியவர்,
ஆற்றின்
குறுக்கே அணைகட்டி
ஏற்றம் பெற வழி
காட்டியவர்.
விருது
நகரின் விருதாக
விளங்கிய காம ராசரையே
தொழுது
நாமும் நாள்தோறும்
தூய வழியில் நடப்போமே!
இள.புகழேந்தி
இள.புகழேந்தி
கதர்வேட்டி நாயகன்கமராசர்கவிதைகள்
பதிலளிநீக்குபண்பாளரின் அழகு புகழேந்தியின் புகழ்
பதிலளிநீக்குநன்றி
நீக்குஅருமை
பதிலளிநீக்கு