இடுகைகள்

செப்டம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தந்தைப் பெரியார்

உலகில் என்றும் உயர்ந்தவர் யார்? ஊருக்கு உழைத்த உத்தமர் யார்? கலகம் நிறைந்த நாட்டினிலே  கண்ணியம் காத்த பெரியவர் யார்? பகுத்தறிவிற்கே பகலவன் யார்? பண்பைப் போற்றி மதித்தவர் யார்? வகுத்த கொள்கை   உயிர் பெறவே  வயலின் தென்னை அழித்தது யார்? சமத்துவம் தந்தச் சான்றோர் யார்? சாதிய  மறுப்பைக் கொண்டவர் யார்? தமக்கென வாழாத் தகையாளர்  தந்தைப் பெரியார் அவர் தானே. வைக்கம் வீரர் என்பவர் யார் ? வையம் வாழ நினைத்தவர் யார்? தைக்கும் ஊசியை நாவினிலே  வைத்து மடமையை ஒழித்தவர் யார்? அன்பின் வழியைக் கொண்டவர் யார்? அகிலம் போற்றும் அறிஞரும் யார்? தொண்டின் வழியில் நடைபோட்ட  தூய  தந்தைப் பெரியார் தான். பெண்ணுரிமைக் குரல் கொடுத்தவர் யார்? மண்ணுயிர் போற்றும் மனிதரும் யார்? எளியோர் வாழ வழி செய்த ஈரோடு தந்தைப் பெரியார் தான்.                                                  - இள.புகழேந்தி                                                                   17/09/2018

ஆசிரியர் தின வாழ்த்து

ஆசிரியர் தின வாழ்த்து  அகரம்  சொல்லிக்  கவிபாடும், ஆசிரியன் புகழ் புவிபாடும், இளைய தலைமுறை அறிவுபெற, ஈண்டு பல்வேறு முறைதேடும். உண்மை அன்பும் நல்லறிவும், ஊரும் உலகும் பெற்றிடவே, எண்ணும் எழுத்தும் பயில்வித்து, ஏற்றம் பெறவே போராடும். ஐயம் நீங்கிய சிந்தனையும், ஆயிரம் சூரியப் பேரொளியும்,  ஒவ்வோர் உள்ளமும் கண்டுணர,  ஓங்கிய கலங்கரை விளக்கமென, ஔவையின் முதுமொழி வழியினிலே, ஆங்கோர் மேதை உதித்ததினம், ஆயிரம் செல்வமும் பெற்றிங்கு, ஆசிரியர் வாழ வாழ்த்துகிறேன்...                                    அன்புடன்                                            இள.புகழேந்தி                                                     5/9/2018