இடுகைகள்

ஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெருந்தலைவர்

 உத்தமர் காந்தி வழியினிலே,      சத்தியம் காத்த ஒரு மனிதர்; நித்தம் நித்தம் நாட்டுநலன்,      நினைத்தே வாழ்ந்த பெருந்தலைவர். பள்ளிக் குழந்தைகள் பசிபோக்க,      பாரினில் உதித்த பண்பாளர்; சொல்லில் அடிக்கும் வல்லமையை,      சுயமாய் பெற்ற எம் தலைவர். பாமரன் போன்ற தோற்றமுடன்,      பாரே புகழும் ஏற்றமுடன்; ஆலைகள், அணைகள் நிறுவியவர்,      அதிசயம் நிறைந்த பிறவியவர். மனிதனை மதித்த பண்பாளர்,      மக்கள் சேவையின் மாண்பாளர்;  கனிகளை நமக்குத் தந்திடவே,      கல்லடி பட்ட மரமானார். இனியொரு தலைவர் இதுபோலே,      இப்புவி தோன்றி வருவாரோ? பாரே போற்றும் பெருந்தலைவர்,      பணியினை மீண்டும் தருவாரா?                                                       இள.புகழேந்தி.D.T.Ed.,M.A.,B.Ed.,                                                    ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி,                                                     ரெட்டிபட்டி காட்டுவளவு,                                                        ஓமலூர் ஒன்றியம்.