பெருந்தலைவர்

 உத்தமர் காந்தி வழியினிலே,
     சத்தியம் காத்த ஒரு மனிதர்;
நித்தம் நித்தம் நாட்டுநலன்,
     நினைத்தே வாழ்ந்த பெருந்தலைவர்.

பள்ளிக் குழந்தைகள் பசிபோக்க,
     பாரினில் உதித்த பண்பாளர்;
சொல்லில் அடிக்கும் வல்லமையை,
     சுயமாய் பெற்ற எம் தலைவர்.

பாமரன் போன்ற தோற்றமுடன்,
     பாரே புகழும் ஏற்றமுடன்;
ஆலைகள், அணைகள் நிறுவியவர்,
     அதிசயம் நிறைந்த பிறவியவர்.

மனிதனை மதித்த பண்பாளர்,
     மக்கள் சேவையின் மாண்பாளர்;
 கனிகளை நமக்குத் தந்திடவே,
     கல்லடி பட்ட மரமானார்.

இனியொரு தலைவர் இதுபோலே,
     இப்புவி தோன்றி வருவாரோ?
பாரே போற்றும் பெருந்தலைவர்,
     பணியினை மீண்டும் தருவாரா?

                                                      இள.புகழேந்தி.D.T.Ed.,M.A.,B.Ed.,
                                                   ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி,
                                                    ரெட்டிபட்டி காட்டுவளவு,
                                                       ஓமலூர் ஒன்றியம்.
                                                  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்