பெருந்தலைவர்
உத்தமர் காந்தி வழியினிலே,
சத்தியம் காத்த ஒரு மனிதர்;
நித்தம் நித்தம் நாட்டுநலன்,
நினைத்தே வாழ்ந்த பெருந்தலைவர்.
பள்ளிக் குழந்தைகள் பசிபோக்க,
பாரினில் உதித்த பண்பாளர்;
சொல்லில் அடிக்கும் வல்லமையை,
சுயமாய் பெற்ற எம் தலைவர்.
பாமரன் போன்ற தோற்றமுடன்,
பாரே புகழும் ஏற்றமுடன்;
ஆலைகள், அணைகள் நிறுவியவர்,
அதிசயம் நிறைந்த பிறவியவர்.
மனிதனை மதித்த பண்பாளர்,
மக்கள் சேவையின் மாண்பாளர்;
கனிகளை நமக்குத் தந்திடவே,
கல்லடி பட்ட மரமானார்.
இனியொரு தலைவர் இதுபோலே,
இப்புவி தோன்றி வருவாரோ?
பாரே போற்றும் பெருந்தலைவர்,
பணியினை மீண்டும் தருவாரா?
இள.புகழேந்தி.D.T.Ed.,M.A.,B.Ed.,
ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி,
ரெட்டிபட்டி காட்டுவளவு,
ஓமலூர் ஒன்றியம்.
சத்தியம் காத்த ஒரு மனிதர்;
நித்தம் நித்தம் நாட்டுநலன்,
நினைத்தே வாழ்ந்த பெருந்தலைவர்.
பள்ளிக் குழந்தைகள் பசிபோக்க,
பாரினில் உதித்த பண்பாளர்;
சொல்லில் அடிக்கும் வல்லமையை,
சுயமாய் பெற்ற எம் தலைவர்.
பாமரன் போன்ற தோற்றமுடன்,
பாரே புகழும் ஏற்றமுடன்;
ஆலைகள், அணைகள் நிறுவியவர்,
அதிசயம் நிறைந்த பிறவியவர்.
மனிதனை மதித்த பண்பாளர்,
மக்கள் சேவையின் மாண்பாளர்;
கனிகளை நமக்குத் தந்திடவே,
கல்லடி பட்ட மரமானார்.
இனியொரு தலைவர் இதுபோலே,
இப்புவி தோன்றி வருவாரோ?
பாரே போற்றும் பெருந்தலைவர்,
பணியினை மீண்டும் தருவாரா?
இள.புகழேந்தி.D.T.Ed.,M.A.,B.Ed.,
ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி,
ரெட்டிபட்டி காட்டுவளவு,
ஓமலூர் ஒன்றியம்.
கருத்துகள்
கருத்துரையிடுக