இடுகைகள்

நவம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுட்டித் தம்பி

சுட்டித் தம்பி குட்டிப் பாப்பா     எல்லோரும் ஒன்னா வாராங்க கட்டிக் கரும்பாம் கனியாம் தேனாம்     கல்வியை கற்றிடப் போறாங்க துள்ளிச் செல்லும் புள்ளி மானாய்     துடிப்புடன் கற்றிட வாராங்க பள்ளி சொல்லும் பாட்டும் கதையும்     பாங்காய் பெற்றிடப் போறாங்க படிப்புடன் பேச்சும் பட்டும் திறனும்      அடிப்படை எல்லாம் கற்பாங்க பாரினில் சிறந்த பாரத நாட்டில்      பண்பின் தூண்களாய் நிற்பாங்க நாடும் உயர்ந்து நாமும் உயர      நல்வழி எல்லாம் சொல்வாங்க நாளைய உலகில் யாவரும் போற்றிட      நலமுடன் வாழ்வில் வெல்வாங்க.                                                      - இள.புகழேந்தி

விடுதலை

அன்னியர் ஆட்சியில் அடிமைப்பட்டு     அனுதினம் ரத்தமாய் கண்ணீர் விட்டு எண்ணிய எண்ணத்தை சொல்லக்கூட     எழுந்த தடைகளை தகர்த்துவிட்டு புண்ணிய பலனாய் பிறந்த எங்கள்     முன்னய தியாகச் செம்மல் கூட்டம் திண்ணிய நெஞ்சுரம் கொண்டு நாட்டின்     கண்ணியம் காத்திட நிமிர்ந்து நின்றார். கதரை ஆடையாய் கொண்ட மக்கள்      காந்திய வழியில் சேர்ந்து நிற்க நிலையற்ற வாழ்விது என்று எண்ணி      நிமிர்த்தினார் நேதாஜி ஆயுதத்தை ரத்தத்தை சிந்தியே சோர்ந்து நின்றும்     சத்தியாகிரகத்தை சார்ந்து வென்றும் பெற்றதோர் விடுதலைப் பேணிக்காக்க     பெரியோரின் வழிகளை நாடி நிற்போம்.                                                            - இள.புகழேந்தி