பொங்கல் 2011
பொங்கல் வாழ்த்துக்கள்
மார்கழிப் பனியாம் மடமை ஒழிந்திட
மங்கலத் தாயாம் தைமகள் வந்திட
ஆதவன் கிழக்கினில் ஆசிகள் அளித்திட
அறுவடை நெல்மணி அகத்தினில் நிறைந்திட
மாதவம் இயற்றிய மாடுகள் மகிழ்ந்திட
மாந்தர் யாவரும் மகிழ்ச்சியில் திளைத்திட
ஆதவன் கிழக்கினில் ஆசிகள் அளித்திட
அறுவடை நெல்மணி அகத்தினில் நிறைந்திட
மாதவம் இயற்றிய மாடுகள் மகிழ்ந்திட
மாந்தர் யாவரும் மகிழ்ச்சியில் திளைத்திட
உழைத்துக் களைத்தவன் உள்ளம் களித்திட
உறவோடும் நட்போடும் உண்டு மகிழ்ந்திட
பாடுகள் பட்டவன் பலனை அடைந்திட
பாமர மக்களின் பசியும் நீங்கிட
பசித்தவன் வயிற்றுக்கு பானை பொங்கிட
உழைத்தவன் உள்ளத்தின் உவகை ஒங்கிட
செந்நெல்லும் கரும்போடும் செந்தமிழ் மணந்திட
செவிஎங்கும் உழவனின் சிரிப்பொலி கேட்டிட
தையினில் சூரியன் தரணியை வாழ்த்திட
தமிழினம் வாழ்ந்திட தமிழனாய் வாழ்ந்திடு
அன்புடன்
கருத்துகள்
கருத்துரையிடுக