ரோஜா மலரை மார்போடு ராஜா போலே சூடியவர் தேசத்திற்காய் போராடி தியாகம் செய்த செம்மலவர் பதினான்கு நவம்பர் நன்னாளில் பாரத மண்ணில் உதித்தவராம் பண்பும் பணிவும் ஒருசேர பாரில் என்றும் நிலைத்தவராம் தேசத் தந்தை காந்திமகான் தேடிக் கண்ட ஒரு தலைவர் பாசத்துடனே குழந்தைகளை பார்க்கும் நல்ல மனிதரவர் பாரத தேசப் பிரதமராய் பலநாள் முன்னர் இருந்தாரே! ஆசிய ஜோதி என்றவரை அன்புடன் மக்கள் அழைத்தனரே! குழந்தைகளுடனே மகிழ்வோடு குதூகலமாய் பேசுபவர் குழந்தைகள் தினமே அவராலே கொண்டாடுகின்றோம் மனம்போலே.
உலகில் என்றும் உயர்ந்தவர் யார்? ஊருக்கு உழைத்த உத்தமர் யார்? கலகம் நிறைந்த நாட்டினிலே கண்ணியம் காத்த பெரியவர் யார்? பகுத்தறிவிற்கே பகலவன் யார்? பண்பைப் போற்றி மதித்தவர் யார்? வகுத்த கொள்கை உயிர் பெறவே வயலின் தென்னை அழித்தது யார்? சமத்துவம் தந்தச் சான்றோர் யார்? சாதிய மறுப்பைக் கொண்டவர் யார்? தமக்கென வாழாத் தகையாளர் தந்தைப் பெரியார் அவர் தானே. வைக்கம் வீரர் என்பவர் யார் ? வையம் வாழ நினைத்தவர் யார்? தைக்கும் ஊசியை நாவினிலே வைத்து மடமையை ஒழித்தவர் யார்? அன்பின் வழியைக் கொண்டவர் யார்? அகிலம் போற்றும் அறிஞரும் யார்? தொண்டின் வழியில் நடைபோட்ட தூய தந்தைப் பெரியார் தான். பெண்ணுரிமைக் குரல் கொடுத்தவர் யார்? மண்ணுயிர் போற்றும் மனிதரும் யார்? எளியோர் வாழ வழி செய்த ஈரோடு தந்தைப் பெரியார் தான். - இள.புகழேந்தி 17/09/2018
கள்ளம் இல்லா வெள்ளை மனம் கதரை அணிந்த கருந்தேகம் சொல்லில் அடங்கா அவர்புகழை சொல்லவும் கேட்கவும் சுகம்தானே ! கல்வி என்ற சொல்லுக்கே கண்ணியம் செய்த பெருந்தலைவர் பள்ளி செல்லும் குழந்தைகளின் பசியைப் போக்கிய மாமனிதர் . நாட்டில் தொழில்கள் பெருகிடவே நல்ல திட்டம் தீட்டியவர் , ஆற்றின் குறுக்கே அணைகட்டி ஏற்றம் பெற வழி காட்டியவர் . விருது நகரின் விருதாக விளங்கிய காம ராசரையே தொழுது நாமும் நாள்தோறும் தூய வழியில் நடப்போமே ! இள.புகழேந்தி
கருத்துகள்
கருத்துரையிடுக