கள்ளம் இல்லா வெள்ளை மனம் கதரை அணிந்த கருந்தேகம் சொல்லில் அடங்கா அவர்புகழை சொல்லவும் கேட்கவும் சுகம்தானே ! கல்வி என்ற சொல்லுக்கே கண்ணியம் செய்த பெருந்தலைவர் பள்ளி செல்லும் குழந்தைகளின் பசியைப் போக்கிய மாமனிதர் . நாட்டில் தொழில்கள் பெருகிடவே நல்ல திட்டம் தீட்டியவர் , ஆற்றின் குறுக்கே அணைகட்டி ஏற்றம் பெற வழி காட்டியவர் . விருது நகரின் விருதாக விளங்கிய காம ராசரையே தொழுது நாமும் நாள்தோறும் தூய வழியில் நடப்போமே ! இள.புகழேந்தி
கருத்துகள்
கருத்துரையிடுக