வேண்டுகோள்

கவிதை வரவில்லை
காற்றும் வரவில்லை 
கனவும் வரவில்லை
ஒருமுறை என்னை பார்த்துவிடேன்.

குளிரும் தெரியவில்லை
கோடையும் சுடுவதில்லை
வாடையும் முடிவதில்லை
வார்த்தையொன்று பேசிவிடேன்.

திங்கள் தெரிவதில்லை
தேய்பிறை வளர்வதில்லை
கண்கள் உறங்கவில்லை
கனவிலேனும் வந்துவிடேன்.
        
வாழ்க்கை இனிக்கவில்லை
வார்த்தை கிடைக்கவில்லை
வாழப் பிடிக்கவில்லை
வழித்துணையாய் வந்துவிடேன்.
                அன்புடன்
                   புகழ்      

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்