கடல்
உலகினில் பெரியவள் நீயே-உணவு
உப்புக்கும் நீயேதான் தாயே!
உண்ண மீன்தந்து பசியாற்றினாய்-அலை
ஊழியாய் உயிர்களை பலியாக்கினாய்.
பலவகை உயிர்களின் தாயாகிறாய்-பெரும்
பலத்தோடு சிலபோது பேயாகிறாய்.
வான்நீல நிறம்காட்டும் கண்ணாடியே-இவ்
வையமும் சிறிது உன் முன்னாடியே.
உன்னுள்ளே வாழ்ந்திடும் உயிர்கள்பல-இவ்
உலகினில் மனிதர்போல் குணங்கள் பல,
மண்ணோடு விண்ணையும் இணைத்தாய்-வான்
மழைநீர்க்கு புத்துயிர் கொடுத்தாய்.
கரையோர நண்டுகள் கண்டு -யாம்
கவலைகள் மறந்தது உண்டு.
குறையாத செல்வங்கள் உன்னில்-மனித
குளம்வாழ வழங்கிடு மண்ணில்.
miga nanru...
பதிலளிநீக்கு