காமக்கவி
கண்களால் மொழிபேசி கவிகேட்ட தமிழ் மகளே ! கவிகளில் மஞ்சமிட்டு -இன்ப காமக்கவி சொல்கிறேன் கேள், ஒளிவீசி உலவிடும் குளிர்நிலா முகத்தினை ஒருமுறை என்னிடம் காட்டு- நீஎன் உதடுகள் இசைத்திடும் பாட்டு. வேல்களை விழியாக்கி விண்மீனாய் ஒளிவிடும் கண்களே எனைமெல்ல நோக்கு-வேறு கன்னியைப் பாடாதென் நாக்கு. வாசித்துப் பார்க்காத வசந்தப் புத்தகமே நேசித்துப் பார்த்துவிடு என்னை-என் நெஞ்சத்துள் வைத்தேனே உன்னை. மேகத்தைப் போலாடி மோகத்தை தூண்டிவிடும் கூந்தலைக் கோதிவிட வேண்டும்-நீ குளிர்காய தீயாக வேண்டும். குளிர்நிலா பிறைபோல ஒளிவிடும் நெற்றியில் குங்குமம் வைத்துவிட வேண்டும்-உன் கூடவே நான் வாழ வேண்டும். கடல்மீன்கள் போலாடும் கண்களின் காவலாய் இமையாக நான்மாற வேண்டும்-என் இளமைக்கு நீமட்டும் வேண்டும். எள்ளுப்பூ கவிழ்ந்ததுபோல் எடுப்பான நாசியிலே சுவாசமாய் நான்மாற வேண்டும்-என் சொர்க்கமே நீயாக வேண்டும். வலம்புரிச் சங்காக வார்த்தெடுத்த கழுத்தினிலே விரல்களால் கோலமிட வேண்டும்-உனை வீணையென நான்மீட்ட வேண்டும். தாமரை அரும்பிரண்டு தனங்கலாய் வந்தததில் முகம்புதைத் தழுதுவிட வேண்டும்-உனை முழுமையாய் ரசித்துவிட வேண்டும். என் சேயை நீசும