இடுகைகள்

ஜனவரி, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காமக்கவி

கண்களால் மொழிபேசி கவிகேட்ட தமிழ் மகளே ! கவிகளில் மஞ்சமிட்டு -இன்ப  காமக்கவி சொல்கிறேன் கேள், ஒளிவீசி உலவிடும்  குளிர்நிலா முகத்தினை  ஒருமுறை என்னிடம் காட்டு- நீஎன் உதடுகள் இசைத்திடும் பாட்டு. வேல்களை விழியாக்கி  விண்மீனாய் ஒளிவிடும் கண்களே எனைமெல்ல நோக்கு-வேறு  கன்னியைப் பாடாதென் நாக்கு.  வாசித்துப் பார்க்காத வசந்தப் புத்தகமே நேசித்துப் பார்த்துவிடு என்னை-என் நெஞ்சத்துள் வைத்தேனே உன்னை. மேகத்தைப் போலாடி  மோகத்தை தூண்டிவிடும் கூந்தலைக் கோதிவிட வேண்டும்-நீ குளிர்காய தீயாக வேண்டும். குளிர்நிலா பிறைபோல ஒளிவிடும் நெற்றியில் குங்குமம் வைத்துவிட வேண்டும்-உன் கூடவே நான் வாழ வேண்டும். கடல்மீன்கள் போலாடும் கண்களின் காவலாய் இமையாக நான்மாற வேண்டும்-என் இளமைக்கு நீமட்டும் வேண்டும். எள்ளுப்பூ கவிழ்ந்ததுபோல் எடுப்பான நாசியிலே சுவாசமாய் நான்மாற வேண்டும்-என் சொர்க்கமே நீயாக வேண்டும். வலம்புரிச் சங்காக வார்த்தெடுத்த கழுத்தினிலே விரல்களால் கோலமிட வேண்டும்-உனை வீணையென நான்மீட்ட வேண்டும். தாமரை அரும்பிரண்டு தனங்கலாய் வந்தததில் முகம்புதைத் தழுதுவிட வேண்டும்-உனை முழுமையாய் ரசித்துவிட வேண்டும். என் சேயை நீசும

தோழி!

வழியோரம் நீபோகக் கண்டேன் -இது வான்மதியின் ஊர்வலமோ என்றேன். வான்மதியின் வடிவான முகமும்-செவ் வரிக்கொவ்வை வனப்பான இதழும், கவிபாடச் சொன்னதடி என்னை-இனி கனவிலேனும் காண்பேனோ உன்னை. முழுமதியை முகமாக்கிக் கொண்டாய்-உன் முள்விழியால் எனைமெல்லத் தின்றாய்.   இதழ்மலர்ந்த போதெல்லாம் நெஞ்சம்-உன் இதயத்தில் புகத்தேடும் தஞ்சம். தனங்களில் முகம்புதைத்து அழவோ?-உன் தளிர்மேனி சிலைஎன்று தொழவோ? கண்வீச்சில் சொல்லிவிடு சேதி-என் காதலுக்கு அதுபோதும் தோழி. காத்துக்கிடக்கிறேன் சொல்வாயா?-தினம் கனவில் எனைக்கட்டிக் கொள்வாயா? இதயத்தில் போராடித் தோற்பேன்-நீ இல்லையெனச் சொன்னாலும் ஏற்பேன்.    

வளர்பிறை

வளர்பிறையை நுதலாக்கி  வரிக்கொவ்வை இதழாக்கி வின்மீனை கண்ணாக்கினாய்-என்னை விழியாலே புண்ணாக்கினாய்.

கூச்சம்

மலரொன்று இதழ் திறந்து மௌன மொழி பேச  மனமெங்கும் அதுகேட்டு  மல்லிமனம் வீச  இதழ் சேர்க்க நினைத்தாலே  இளந்தென்றல் வீசும் இதைச்சொல்ல நினைத்தாலே என்னுள்ளம் கூசும்.

பார்வை

பார்வைக் கல்லெறிந்தாய்  மனக்குளம் கலங்கிப்போனது   உணர்வு மீன்கள்  உயிருக்குப் போராடுகிறது.

கண்ணீர்

உன் தாழம்பூ விரல்கள்  என் தலைகோத சம்மதித்தால் அந்த ஆறுதலுக்காக காலமெல்லாம் கண்ணீர் விடுவேன்.

தங்கக்கூண்டு

சிலநேரங்களில் தங்கக்கூண்டுகள் தத்தைக்கு பிடித்திருக்கிறது - ஆனால் சுதந்திரத்தை விட சொர்க்கம்  வேறென்ன இருக்க முடியும்?

ஹைக்கூ (சின்னஞ்சிறு கவிதைகள் சிந்தனைத் துளிகளோடு... )

  நான் குப்பைக் கூடைதான் உன் நினைவுகள் குப்பைகள் எனில்....   

பொங்கல் 2011

பொங்கல் வாழ்த்துக்கள்   மார்கழிப் பனியாம்    மடமை  ஒழிந்திட மங்கலத் தாயாம்  தைமகள்   வந்திட ஆதவன் கிழக்கினில் ஆசிகள் அளித்திட  அறுவடை நெல்மணி அகத்தினில் நிறைந்திட மாதவம் இயற்றிய மாடுகள் மகிழ் ந் திட மாந்தர் யாவரும் மகிழ்ச்சியில் திளைத்திட உழைத்துக் களைத்தவன்   உள்ளம் களித்திட உறவோடும் நட்போடும்  உண்டு மகிழ் ந் திட பாடுகள் பட்டவன்   பலனை அடைந்திட பாமர மக்களின்   பசியும் நீங்கிட பசித்தவன் வயிற்றுக்கு பானை பொங்கிட உழைத்தவன் உள்ளத்தின்  உவகை ஒங்கிட செந்நெல்லும்  கரும்போடு ம்  செந்தமிழ் மணந்திட செவிஎங்கும் உழவனின் சிரிப்பொலி கேட்டிட தையினில் சூரியன்   தரணியை வாழ்த்திட  தமிழினம் வாழ்ந்திட  தமிழனாய்  வாழ் ந் திடு                            அன்புடன்                                இள.புகழேந்தி                                                                    பொங்கல் 2010                                      

அரசியல்வாதிகள்

தான் பெற்ற மக்களுக்காக  தன்னைப் பெற்ற மக்களைத் துறந்த  வெள்ளுடைத் துறவிகள் - அரசியல்வாதிகள் .